Presented in this blog are some of MAESTRO ILAIYARAAJA's musical gems.
You have to find out the Movie, Album or the Song in which it appears.

Saturday, June 23, 2012

MQ 2129

Identify the female voice.

Monday, June 4, 2012

ILAIYARAAJA WISHES SPB





இன்று (4 ஜூன் 1946) ”பாடும் நிலா”வின் பிறந்த நாள். இசைஞானி, 27.2.1997 குமுதம் வார இதழில் தன் நண்பனுக்காய் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

பாலா!

உனக்கு நினைவிருக்கோ இல்லையோ.. வெங்கட்ராவ் என்கிற தெலுங்கு நண்பரின் மனைவி நடத்திய நர்சரி ஸ்கூலுக்காக நீ இசை நிகழ்ச்சி நடத்தின இடத்துல நான் உன்னை முதன் முதலா பார்த்தேன். அப்போது ஒண்ணு, ரெண்டு படத்துல நீ பாடி இருந்தே! ‘ஆயிரம் நிலவே’ பாட்டுக்குப்பின் உன் பேர் வெளியில தெரிஞ்சுது.

உன்னோட இசைக்குழுவிலிருந்த அனிருத்ரா என்ற ஆர்மோனியக் கலைஞர் எனக்கும் நண்பர். உனக்குன்னு இசைக்குழு ஒன்று அமைக்க நீ என்னைக் கேட்டபோது நான் ’ஏற்கனவே அனிருத்ரா இருக்காரே’ன்னு தயங்கினேன். ஆனா நீயும் வெங்கட்ராவும் நீ பாடின இசைத் தட்டுக்களை, நொட்டேஷன் எடுப்பதற்காக என் கைகளில் திணிச்சிட்டுப் போயிட்டீங்க.

அப்புறம், மாலை நேரங்களில், உன்னோட ரங்கராஜபுரம் வாடகை வீட்டுல நாம அடிச்ச இசைக் கொட்டங்களை, மனசுக்குள்ளார இருக்கும் அந்த தூசு படிஞ்சுபோன பக்கங்களை, தூசி தட்டிவிட்டு, படிச்சுப் பார்க்க இதை ஒரு சந்தர்ப்பமா நான் பயன்படுத்திக்கறேன். நீ ஒண்ணும் கண்டுக்காதே!

ஜி.கே.வி. (ஜி.கே. வெங்கடேஷ்) இசையமைச்ச ‘நாட்டக்கார ராயலு’ என்ற படத்துல எப்படியாவது உனக்கு ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கிக் கொடுத்திடணும்னு நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நினைச்சா சிரிப்பு வருது. காரணம் பலாப் பழத்துல ஈயைப் பிடிச்சு உட்கார வைக்கிற வேலை அது! மடையா! மடையா! உன்னை இல்லடா, என்னை சொல்றேன்!

அனங்கா பள்ளி என்ற ஊர்ல கச்சேரியை முடிச்சிட்டு ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் இல்லாத காரணத்தால ராத்திரி ரெண்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கம்பார்ட்மெண்ட்ல ஏறி, தூங்கிப் போனதும், காலையில பத்து மணிக்கு ரயில் ஆடின ஆட்டத்துல கண் விழிச்சுப் பார்த்தபோது, அது ஆடு மாடுகளை அடைச்சுப் போடுற கம்பார்ட்மெண்ட்டுனு தெரிஞ்சு, வாத்தியக்காரர்கள் கத்துனதும், உனக்கு அப்போது தெரின்சிருக்க நியாயமில்லை. ஏன்னா, நீ ஹைதராபாத்ல இருந்து ஃபிளைட்ல போயிட்ட! அப்புறம் தெரிஞ்சிருக்கும்!

இசையமைப்பாளனா ஆனபின் ஏதோ ஒரு மனத்தாங்கல்ல, உனக்கு நான் பாட்டே கொடுக்கல. ஏதோ ஒரு இடத்துல நீயும் நானும் சந்திச்சபோது, “ஏண்டா மடையா! என்னையெல்லாம் பார்த்தா உனக்கு ஒரு பாடகனாத் தெரியலையா?ன்னு நீ கேட்டவுடன், என்னுடைய மனத்தாங்கல் எல்லாம் காற்றுப்போன பலூன் போல ஆனது. என்னுடைய படத்துக்காக நீ பாடின முதல் பாட்டு “ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்”..! டேய் பாலா.. உன்னோட நட்பு ஒரு நாளோட போற விஷயமா என்ன? அந்த ஒரு நாள், இன்னிக்குக் கேட்டாலும் கடந்த முப்பது வருஷங்களையும் கடந்து நிற்பதை உணர முடியுது. என்னோட கற்பனைக்கு நீ குரலா இருந்திருக்கே. மறக்கவே முடியாத பாடல்களையெல்லாம் நீதான் எனக்குப் பாடியிருக்கே. வேறு யாராவது கூட பாடியிருக்கலாம். ஆனா ஏன் அப்படி நடக்கலே?

உன்னிடம் எனக்குப் பிடித்த சமாச்சாரங்கள்:

• ஒரு பிரபலமான பாடகனாக நீ இருந்தபோதுகூட, உன்னிடம் ஆர்மோனியம் வாசிக்கிறவனாக இருந்த என்னிடமும், மற்ற வாத்தியக்காரர்களிடமும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நீ பழகியது.

• பாட்டு சொல்லிக்கொடுத்தவுடன் பிளாட்டிங் பேப்பர்போல ஒத்தி எடுப்பது.

• ரெக்கார்டிங்கில் பாடுவதைவிட கச்சேரிகளில் நன்றாக மெருகேற்றிப் பாடுவது.

நீயும் நானும் ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்தோம். உன்னை ஒரு பாடகனாக நானும், என்னை ஒரு இசையமைப்பாளனாக நீயும் நினைக்கறதில்லை என்பது உனக்கும், எனக்கும்தான் தெரியும்.

மனசுக்குள்ளே எவ்வளவு அசிங்கங்கள் இருந்தாலும், அதே மனசுக்குள்ளே இருந்து எவ்வளவு புனிதமான இசை வெளியில் வருது! அசிங்கமான மனசுன்னு தெரிஞ்சிருந்தும், ஏதோ ஒரு சக்தி மனசுல உட்கார்ந்து, என்னென்னத்தைக் கொண்டு வருது! அடேயப்பா!

மாமேதை மோசார்ட் சொன்னான்: “நான் ஒரு அசிங்கமானவன். ஆனால் என் இசை அசிங்கமானது அல்ல”

ஒண்ணா ரெண்டா, எத்தனை தடவை அந்த சக்தி, நம்மோட கலந்து எத்தனையோ வடிவங்களை வெளியேத்திட்டுப் போயிருக்கு!

தவறு பண்ணியிருந்தாலும் மன்னிச்சு அந்த சக்தி வந்து கலந்து போறதனால நீ கர்வப்படு! கர்வப்படும் அருகதை உனக்கு இருக்கிறது.

நல்லதோர் வீணையைப் புழுதியில் எறிந்த பராசக்தி, உன்னை, என்னைப் போன்ற புல்லை எடுத்துப் புல்லாங்குழலாக்கிவிட்டாள். இந்தப் புல்லுக்குத் தெரியும் இது புல்லாங்குழல் இல்லை என்று.

பராசக்தி என்று எங்கேயோ தனியா இல்லை. நமக்கு வேலை கொடுத்த தயாரிப்பாளர்கள். வேலை வாங்கிய டைரக்டர்கள், வேலையை ரசிக்கிற ஜனங்கள்தான் பராசக்திகள். பாரதி! பராசக்தி உன்னைப் புழுதியில் எரியவில்லை. எங்க மனசுக்குள்ளதான் எறிந்திருக்கிறாள். ஓ! நீ எங்க மனசைத்தான் புழுதின்னு சொன்னாயா? ஆமாம்! ஆமாம்! அதென்னமோ நிஜம்தான்!

ஒண்ணா வந்தோம்; ஒண்ணா வேலை செஞ்சோம் என்பதல்ல. அதற்கும் அப்பால என்னமோ இருக்கு பாலா! சூரியன் தனியாத்தான் இருக்கு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு வெளிச்சம் மட்டுமில்லை. இன்னும் என்னென்னமோ இருக்கு. உனக்கும் எனக்கும் இடையிலேயும் அப்படி என்னென்னமோ இருக்கு!

லிங்க் பகிர்வு : திரு. சிவகுமார்

நன்றி: குமுதம் 27.2.1997
********************************************

Sunday, June 3, 2012

RADIO MIRCHI GOWTHAM VASUDEV MENON INTERVIEW





நேற்று ரேடியோ மிர்ச்சி அலைவரிசையில் இயக்குனர் கவுதம்மேனன் பங்குபெற்று, இசைஞானியுடனான அவரது ‘நீதானே என் பொன் வசந்தம்’ பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியைத் தவற விட்டவர்களுக்காய்:

கே: ராஜா Sir – Gowtham Menon இந்தக் Combination அமைந்தது எப்படி? சொல்லுங்கள்.

ப: Starting from மின்னலே, எல்லா படத்துக்கும் ராஜா Sir’ஐக் கேட்கலாம் என்றுதான் நினைப்பேன். Because I grew up with his Music. ”நீதானே என் பொன்வசந்தம்” படம் ஒரு 50% Shoot பண்ணி முடித்துவிட்டேன். கதாநாயகியின் பெயர் நித்யா. அதில் ஒரு காட்சி..! ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வரும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ பாடலை Jeeva கதாநாயகிக்காகப் பாடுவார். அப்போதுதான் எனக்குத் தோன்றியது .. ‘இது ராஜா Sir படத்தில் வரும் பாடலின் வரிகள்’. எனவே அவரைக் கேட்கலாம்’ என்று. என் தயக்கத்தைத் தவிர்த்து நேராகப் போய் அவரை சந்தித்தேன். நான் அவரை சந்திப்பேன் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. நான் வேறு ஏதோ விஷயமாக அவரை சந்திக்க வந்திருக்கிறேன் என்றுதான் அவரும் நினைத்திருப்பார் என்று எண்ணுகிறேன். அவரிடம் நான் ‘Sir.. ஒவ்வொரு முறையும் உங்களிடம் வரவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் எனக்கு Guts இல்லை. இப்போது என்னுடைய Work பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். இந்தப் படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்’ என்று கூறினேன். அவரும் ‘ஆமா..! உங்க Work பற்றி எனக்குத் தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார். நான் Shoot பண்ண காட்சிகள் எல்லாம் அவருக்குப் போட்டுக்காட்டினேன். இந்தப் படத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் அவரிடம் பேசினேன். ‘Wonderful’ என்றார். 

கே: ராஜா Sir’உடன் உங்களுடைய composing அனுபவம் எப்படி இருந்தது ?

ப: Second Meeting’லேயே Composing ஆரம்பித்து விட்டார். Payment’ஓ.. Advance’ஓ… எதுவுமே அவர் என்னிடம் பேசவில்லை. Situation சொல்லுவேன். ‘What kind of Music do you want?’ அப்டின்னு கேட்பார். மிகவும் பயத்துடன், எனக்குத் தெரிந்த Genre எல்லாம் அவரிடம் சொன்னேன். “Male Voice.. அதுக்கப்பறம் கொஞ்சம் Silence.. பின்னர் Guitar.. வேணும்”..! இப்படி அவரிடம் நிறைய Explain செய்தேன். “ஓ.கே.” என்றார். வெறும் ஹார்மோனியம்தான். தரையில்தான் உட்கார்ந்திருந்தோம். அவருடைய Prasad Studio’வில்தான் கம்போஸிங் நடைபெற்றது. இதற்காக வெளியில் எங்கும் செல்லவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக Situation சொல்லச் சொல்ல அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு மூன்று Tunes கொடுத்தவுடன்.. “Sir.. இன்னிக்கி இது போதும்” என்றேன். ‘இல்ல இல்ல… நல்ல Flow’வில் இருக்கிறது. வரட்டும்” என்றார். நான் அவரிடம் “Sir.. இவ்வளவு விஷயங்களை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றேன். ஏனென்றால் I needed to settle down with that Music. 

“Do you think I’ve come prepared?” என்று என்னிடம் பதிலுக்குக் கேட்டார். உண்மையில் அப்படித்தான் இருந்தது. இவர் ஏற்கெனவே எங்கேயோ Compose செய்து பாடல்களை Readymade’ஆகக் கொண்டுவந்தது போலத்தான் இருந்தது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அவர் ஆர்மோனியத்தில் கை வைக்கும்போதுதான் அந்த Tune பிறக்கிறது. அது உண்மையில் Mind Blowing. ஒரு மூன்று நாட்களில் 14 Tunes கொடுத்தார். எனக்குப் படத்தில் 8 பாடல்கள்தான் தேவைப்பட்டது. “You decide what you want. நீங்க கேட்ட Situation’களுக்கு நான் Tunes கொடுத்திருக்கிறேன். எது Best’ஓ அதை நீங்க Choose பண்ணிகிட்டு வாங்க. இதுதான் மற்றவர்களிடமும் நான் செய்வது” என்றார். நான் அவர் குரலில் அவர் பாடித் தந்த Tune’களை வைத்து ஒரு 24 மணி நேரம் Work செய்தேன். அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து ‘இந்த இந்த Tunes எனக்கு வேண்டும்” என்று 8 பாடல்களை அவரிடம் கொடுத்தேன்.

கே: லண்டனுக்குச் சென்று அவருடன் பாடல்கள் பதிவு செய்த அனுபவம்..??

ப: Voices மட்டும் இங்கே Record பண்ணிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இங்கே Top Singers பாடிய பாடல்களின் வெறும் Voices’ஐ மட்டும் எடுத்துக்கொண்டு London சென்றோம். ‘இதற்கு எப்படி Music வரும். எப்படி செய்வார்?’ என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அவருக்கு ஏற்கெனவே வாசித்திருந்த Budapest கலைஞர்களுடன் London Angel Studio’வை ஏற்கெனவே மூன்று வாரங்களுக்கு Block பண்ணிவைத்துவிட்டு, prepared’ஆகத்தான் சென்றோம். அங்கே Musicians தயாராக இருந்தனர். அவர்களுக்கு வெறும் Papers மட்டும்தான் கொடுத்தார். No talking at all. உதாரணத்திற்கு Guitar’ல் ‘டிங்.. டிங்.. டிங் டிங்” அப்படி கூட சொல்ல மாட்டார். Notes கொடுப்பார். அதைப் பார்த்துவிட்டு They’ll Play..! அவ்வளவுதான். ஏற்கெனவே அவருடைய Mind’ல் அந்த Music இருக்கிறது. ‘நான் ஹார்மோனியத்தில் Compose செய்யும்போதே இந்த Music வரும் என்று எனக்குத் தெரியும்’ என்கிறார். எல்லாம் என் கண் முன்னர் Unfold ஆகி வாசிக்கப்படும்போது, I saw Music being created. Music being Born.

கே: இணையத்தில் ராஜா Sir’ஐ Coat & Suit’ல் பார்த்தோம். அவருடைய Look’ல் மாற்றம் இருந்தது. அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?

ப: அவரிடம் அதெல்லாம் ஏற்கெனவே இருந்தது. நான் அவரிடம் “Sir.. Recording’ஐ shoot பண்ணப் போகிறோம். பொதுவாக படத்தில் இருந்துதான் காட்சிகளை Trailer’களில் காண்பிப்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு ‘Making Video’க்களைத் தான் Trailer’களில் காண்பிக்கப் போகிறோம்” என்று சொன்னேன். மேலும் ‘நீங்கள் செய்வது எல்லாம் எனக்குப் புதிதாக இருக்கின்றது. 108 Piece Orchestra.. Music Notes பார்த்து கலைஞர்கள் இசைக்கின்றனர். I want to record all that. இதற்காக Suit போட்ட Look’ல் இருக்கலாமா Sir?” என்று கேட்டேன். சிரித்தார். “Are you Sure?” என்றார். “ஆமா Sir.. நன்றாக இருக்கும்’ என்றேன். ‘OK’ என்றார். அவரிடம் 4 Suits இருந்தது. கொண்டுவந்திருந்தார். இடையில் என்றாவது ஒரு நாள் ‘நான் இன்று White & White’ல் வருகிறேன்’ என்று சொல்லிவிடுவார்..! நான் எதுவும் Force பண்ணவில்லை. He gladly accepted to that.

கே: “சாய்ந்து சாய்ந்து’ பாடலின் Situation என்ன? சொல்லுங்கள்.

ப: நாயகனும் நாயகியும் பேசிக்கிட்டு இருக்காங்க. அப்போ Suddenly அவள் “I Love You” என்கிறாள். உடனே ஒரு Male voice துவங்குகிறது. பின்னர் Guitar and Percussion இணைகிறது. அப்போது இருவரும் Kiss பண்ணத் துவங்குகிறார்கள். பின்னர் பாடல் Break ஆகி அதன்பின்னர் தொடர்ந்து வருகிறது. அவள், “என்ன நீ ஒண்ணுமே சொல்லவில்லையே?” என்று கேட்கிறாள். அவன் “அதுதான் சொன்னேனே” என்கிறான். அதாவது, அவள் அவனிடம் Propose பண்ணதிற்கு அந்த முத்தம்தான் அவனது பதில். இவ்வளவுதான் Situation. நான்தான் ராஜா Sir’இடம், “Sir.. இந்தப் பாடலுக்கு யுவனைப் பாடவைக்கலாம்” என்று சொன்னேன். 

கே: வேறு யாரெல்லாம் பாடியிருக்கிறார்கள்?

யுவன் தமிழில் ஒன்று, தெலுங்கில் ஒன்று பாடியிருக்கிறார். பாடகர் ஷான் ஒரு பாடல், கார்த்திக் ஒரு பாடல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் Granddaughter ரம்யா இரண்டு பாடலும் பாடியிருக்கிறார்கள். Altogether It will be new. இது ராஜா Sir Music’னு தெரியும். ஆனால் மிகவும் புதிதாக இருக்கும். எல்லாமே Script songs..! கதையுடன் வருவது. Second Half’ல் ஐந்து பாடல்கள். Actually the songs will carry forward the Story. எந்த பாடலுமே தேவையில்லாதது என்ற ஒரு Feel இருக்காது.

கே: ராஜா Sir’ன் இசை மீது ஒரு காதல் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

ப: இதை நான் அவரிடமே சொன்னேன். அதாவது ‘நான் கேட்டு வளர்ந்த Music உங்களுடையதுதான். என்னுடைய 13வது வயதில் இருந்து… அல்லது .. Music .. Films என்று ஒரு awareness வரும் இல்லையா? அந்த சமயத்தில் எல்லாம் நான் கேட்டது அவருடைய Music’தான். நான் திருச்சிக்குச் சென்று படித்தபோதும், அங்கேயும் like minded friends ஒரு பத்து பதினைந்துபேர் அவர் பாடல்களையே கேட்டுக்கொண்டு இருப்பார்கள். அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். அன்னக்கிளியில் துவங்கி அவர் எப்படி எல்லாம் இசையமைத்திருக்கிறார் என்று நிறைய பேசுவோம். நான் அவரிடமே “My Music was defined by your songs” என்று சொன்னேன்.

இது எனக்கு மட்டுமில்லை. எல்லோரும் அவர் இசை கேட்டு வளர்ந்தவர்கள்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை சூர்யா இரவு 11.30 மணிக்கு, ”பாண்டிச்சேரியில் இருந்து drive பண்ணிகிட்டு வர்றேன்” என்றார். “என்ன சூர்யா? சொல்லுங்க.” என்றேன். “எனக்கு ஒரு சின்ன Thought. ராஜா Sir இசையில் நானும் நீங்களும் ஒரு படம் பண்ணனும்” என்றார். ‘என்ன திடீர்னு?” என்றேன். ‘தெரியல .. வரும்போது அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே வந்தேன். இது மாதிரி பாடல்கள்.. Feel… இதெல்லாம் யாரும் இதுவரையில் கொடுத்ததே இல்லை. அதனால் நானும் நீங்களும் சேர்ந்து அவர் இசையில் ஒரு படம் பண்ணனும்” என்றார். அது போல நிறைய வகையில் எல்லோரிடத்திலும் அவருடைய இசையின் தாக்கம் ஏதோ வகையில் இருக்கிறது. Music For me is defined by Ilayaraja Sir”.

நன்றி: ரேடியோ மிர்ச்சி, செந்தில், இயக்குனர் கவுதம் மேனன்.